அர்ச்சனை செய்ய சொன்ன பெண்ணை அடித்த தீட்சதர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு!

 

அர்ச்சனை செய்ய சொன்ன பெண்ணை அடித்த தீட்சதர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு  அரசு மருத்துவமனை செவிலியர்  லதா என்பவர் தனது மகனுடன் சென்றுள்ளார்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு  அரசு மருத்துவமனை செவிலியர்  லதா என்பவர் தனது மகனுடன் சென்றுள்ளார். மகனுக்கு பிறந்தநாள் என்பதால், மகன் பெயரில் அர்ச்சனை என்று கூறி பெயரை சொல்வதற்குள் கோயில் தீட்சதர் ஒருவர் அதை  வாங்கி கொண்டு உள்ளே சென்றுவிட்டார். 

chithambaram

நான், பெயர், ராசி எதுவுமே சொல்லாத போது,  எப்படி போய் அர்ச்சனை செய்தீர்கள் என்று கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  தீட்சதர் ஆபாசமாகப் பேசி  அப்பெண்ணைத் தீட்சிதர் தாக்கியுள்ளார். 

kovil

இந்நிலையில் இது  தொடர்பாக லதா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.