அரசு பேருந்தில் பயணித்த மாணவன்.. புட் போர்டில் சென்றதால் நேர்ந்த விபரீதம் !

 

அரசு பேருந்தில் பயணித்த மாணவன்.. புட் போர்டில் சென்றதால் நேர்ந்த விபரீதம் !

இவர் சென்னை டி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரண் தினமும் பள்ளிக்குப் பேருந்தில் செல்வது வழக்கம்.

வேளச்சேரி எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் குமாரசாமி என்பவரது மகன் சரண். இவர் சென்னை டி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரண் தினமும் பள்ளிக்குப் பேருந்தில் செல்வது வழக்கம். அதேபோல இன்று காலை 8:30 மணிக்கு வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியிலிருந்து, தி.நகர் நோக்கிச் சென்று பேருந்தில் ஏறியுள்ளார். காலை நேரம் என்பதால் பேருந்து மிகவும் கூட்டமாக இருந்துள்ளது. அதனால், பள்ளி மாணவர்கள் பலர் அந்த பேருந்தில் புட் போர்டு அடித்தபடி சென்றுள்ளனர். 

ttn

பேருந்து தி.நகரைச் சென்றடைந்தவுடன் மாணவர்கள் ஒவ்வொருவராகப் பேருந்தில் இருந்து குதித்துள்ளனர். அதே போலச் சரணும் பேருந்தில் இருந்து குதித்தான் என்று கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாகச் சரண் பேருந்தின் டயருக்கு அடியில் மாட்டிக்கொண்டுள்ளார். அப்போது அந்த பேருந்து நகர்ந்து சரண் மீது ஏறி நசுக்கியுள்ளது. இதில் சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற பாண்டிபஜார் காவல்துறையினர், ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் பயணிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், மாணவர்கள் புட் போர்டில் பயணித்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சரணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் ஏதேனும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.