‘அரசியல் காரணத்திற்காக தான் போராட்டம் பண்ணுறாங்க’ நடிகை மீரா மிதுனின் சர்ச்சை கருத்து; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
இப்படி சுய விளம்பரத்திற்காக தானே முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதில் வல்லவராக உள்ளார் மீரா மிதுன்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன் ஆரம்பத்திலிருந்தே அவர் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதன்பிறகு மீரா மிதுன் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இருப்பினும் அவரை சுற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மீரா மிதுன் மிரட்டல் ஆடியோக்கள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியது. இப்படி சுய விளம்பரத்திற்காக தானே முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதில் வல்லவராக உள்ளார் மீரா மிதுன்.
அந்த வகையில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துள்ளார் இந்த அம்மையார். அதாவது நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில், இதுகுறித்து நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சட்டம் நல்லது தான்.
இதற்கு எதிரான போராட்டங்கள் அரசியல் காரணத்துக்காக நடந்து வருகிறது என்றும் நமது பிரதமர் மோடி எப்போதும் நல்ல வழியில் பயணிக்கிறார். மோடி வலிமையானவர், மாற்றத்தை உருவாக்குபவர். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.
Good things are never welcomed at first but realized after a decade. Power of ur CAA and it’s efficacy will be known in future. You are always right @narendramodi and that’s why your our @PMOIndia . You inspire me ?
Late CM Jayalalithaa Amma would have supported you for the same pic.twitter.com/xmesH9P3Oy— Meera Mitun (@meera_mitun) December 24, 2019
ஒட்டுமொத்த நாடே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி உயிரை துறந்துவரும் நிலையில் மீரா மிதுனின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.