அய்யா கால்வாயை காணவில்லை… எப்படியாச்சும் கண்டுப்பிடிச்சு குடுங்க! வடிவேலு காமெடி பாணியில் நடந்த ஆர்பாட்டம்!! 

 

அய்யா கால்வாயை காணவில்லை… எப்படியாச்சும் கண்டுப்பிடிச்சு குடுங்க! வடிவேலு காமெடி பாணியில் நடந்த ஆர்பாட்டம்!! 

வடிவேலு நகைச்சுவை காட்சியில் கூறுவது போல, தூர்வாரப்பட்ட கால்வாயை காணவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடிவேலு நகைச்சுவை காட்சியில் கூறுவது போல, தூர்வாரப்பட்ட கால்வாயை காணவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகை புயல் வடிவேலுவின் கிணத்த காணொம் காமெடிய அனைவரும் பார்த்து ரசித்திருப்போம். அதே போன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செலவு கணக்கு விவரத்தில் ராஜாபாளையம் புலியன் ஏரியில் இருந்து ஆல் ஏரி வரை கால்வாய் தூர் வாரியதாக கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், அதிகாரிகளிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வடிவேலு நகைச்சுவை காட்சியில் கூறுவது போல, தூர்வாரப்பட்ட கால்வாயை காணவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.