அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெடிவைப்போம்! மிரட்டல் கடிதம்!!

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெடிவைப்போம்! மிரட்டல் கடிதம்!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிட்டு மசூதி கட்டுவோம் என வெடிகுண்டு மிரட்டல் கடிதம்  வந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிட்டு மசூதி கட்டுவோம் என வெடிகுண்டு மிரட்டல் கடிதம்  வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட நாள் ஆண்டுதோறும் பாபர் மசூதி இடிப்பு தினமாக முஸ்லிம் அமைப்புகளால் அனுசரிக்கப்படுகின்றன. அதன்படி நாளை அந்த தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக அயோத்தியிலும் தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ayothi babar

சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது ஹனீப் பகாவி என்பவர் பெயரில் வந்த  கடிதத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இங்குள்ள கோவில்களை வெளிநாட்டு வெடிகுண்டுகளை மூலம் தகர்த்துவிட்டு மசூதிகளை கட்டுவோம் என்று எழுதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய ஆதம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.