அம்மா உணவகத்தில் இட்லி எப்படி இருக்கிறது? முதலமைச்சர் நேரில் ஆய்வு

 

அம்மா உணவகத்தில் இட்லி எப்படி இருக்கிறது? முதலமைச்சர் நேரில் ஆய்வு

அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை, முதலமைச்சர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்துள்ளார்.

சென்னை: அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை, முதலமைச்சர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்துள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் படை சூழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தந்திருந்தனர்.

அப்போது, திடீரென மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் அம்மா உணவகத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு விற்பனை செய்யப்படும் இட்லியை வாங்கி சாப்பிட்டு பார்த்தார்.

அவருடன் துணை-முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் இட்லி சாப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பணியாளர்களிடம் உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அறிவுரை வழங்கிவிட்டு முதலமைச்சர் புறப்பட்டு சென்றார்.