அம்மாவின் கள்ளக்காதலைப் பற்றி அப்பாவிடம் சொன்ன நான்கு வயது சிறுவன் அடித்துக் கொலை 

 

அம்மாவின் கள்ளக்காதலைப் பற்றி அப்பாவிடம் சொன்ன நான்கு வயது சிறுவன் அடித்துக் கொலை 

தீபாவும் சொரிமுத்தும் திருநெல்வேலியில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். தீபா வீட்டில் இல்லாததால் அந்தோணி சந்தேகமடைந்து தீபாவுக்கு வீடியோ கால் செய்துள்ளார். தீபா போனை எடுக்கவில்லை. தீபா தனது மகனை அவர்கள் இருந்த அறைக்கு வெளியே அடித்து பூட்டி வைத்துள்ளனர். 

 

திருநெல்வேலியில் 4 வயது சிறுவன் தாயின் கள்ளகாதலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவும்(28) அந்தோணி பிரகாஷும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். கோயம்புத்தூரில்  இருக்கும் போது காதலித்த இவர்கள் கல்யாணம் ஆன பின்பு அந்தோணியின் சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரத்திற்கு குடிவந்துள்ளனர். அந்தோணி லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். வேலை காரணமான அடிக்கடி வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், தீபாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த சொரிமுத்து (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

தீபாவும் சொரிமுத்தும் திருநெல்வேலியில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். தீபா வீட்டில் இல்லாததால் அந்தோணி சந்தேகமடைந்து தீபாவுக்கு வீடியோ கால் செய்துள்ளார். தீபா போனை எடுக்கவில்லை. தீபா தனது மகனை அவர்கள் இருந்த அறைக்கு வெளியே அடித்து பூட்டி வைத்துள்ளனர். 

baby-died

மறுபடியும் தீபாவுக்கு அந்தோணி போன் செய்த போது அவரது மகன் லோகேஷ்(4) போனை எடுத்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளான். இதையறிந்த சொரிமுத்து சிறுவனை பலமாக தாக்கியுள்ளார். உடனே சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இருவரும் லோகேசை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் சிறுவன் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

போலீஸ் தீபா மற்றும் சொரிமுத்து இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தீபாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தப்பியோடிய சொரிமுத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.