அமைச்சர் வளர்மதியின் மாமியார் காலமானார்!

 

அமைச்சர் வளர்மதியின் மாமியார் காலமானார்!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வளர்மதி. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்ற இவர் இதுவரை பெரிதாக எந்த புகாரிலும் சிக்காதவர். திருச்சியை மையமாக வைத்து அரசியல் செய்து வரும் இவர் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை கூட நிறைவேற்றிக் கொடுக்க கூடியவர். . இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சர் வளர்மதியின் மாமியார் காலமானார்!

அதிமுக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதியின் மாமியார் அதாவது வளர்மதியின் கணவர் சீதாராமன் தாயார் பாலம்மாள் (வயது 90), சற்று முன்பு திருச்சி உறையூரில் உள்ள அமைச்சர் இல்லத்தில் காலமானார். இவரது இறப்புக்கு அதிமுக நிர்வாகிகள், சக அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். வரது கணவர் சீதாராமன் திருச்சி பாய்லர் ஆலையில் பணியாற்றி வருகிறார்.