அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி!

 

அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி!

அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் நிகழ்த்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விஸ்கான்சின்: அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் நிகழ்த்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மதுபான விடுதியில் கூடியிருந்த வாடிக்கையாளர்களை குறி வைத்து கண்மூடித் தனமாக சுட்டார்.

ttn

இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். ஆனால் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் குண்டு அடிபட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்திய 51 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.