அமித்ஷாவை எதிர்த்தார் – வீடில்லாமல் தவித்தார்- குடியுரிமைக்கெதிராக குரல் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை

 

அமித்ஷாவை எதிர்த்தார் – வீடில்லாமல் தவித்தார்- குடியுரிமைக்கெதிராக குரல் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை

தெற்கு தில்லியில் அமித்ஷாவும் அவரது ஆதரவாளர்களும் வீடுவீடாக CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இரண்டு பேர் “Goback அமித்ஷா” என்ற Banner உடன் அவரையும் CAA வையும் எதிர்த்து கோஷமிட்டதால் அவர்கள் வசிக்கும் வாடகை வீட்டை உடனே House owner ஆல் காலி செய்ய வைக்கப்பட்டார் .

தெற்கு தில்லியில் அமித்ஷாவும் அவரது ஆதரவாளர்களும் வீடுவீடாக CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இரண்டு பேர் “Goback அமித்ஷா” என்ற Banner உடன் அவரையும் CAA வையும் எதிர்த்து கோஷமிட்டதால் அவர்கள் வசிக்கும் வாடகை வீட்டை உடனே House owner ஆல் காலி செய்ய வைக்கப்பட்டார் .
கேரளாவை சேர்ந்த இரண்டு வக்கீல்கள் சூர்யா மற்றும் ஹரினா ஆகியோர் தெற்கு டெல்லியில் வசித்து வந்தனர் .அங்கு உள்ள லஜ்பத் நகரில் அமித்ஷாவும் அவரது ஆதரவாளர்களும் சென்ற வாரம் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அதை விளக்கும் வகையிலும் அந்த பகுதி முழுவதும் வீடுவீடாக நோட்டீஸ்களை விநியோகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

amit-shah-delhi-rally

அப்போது சூர்யா மற்றும் அவரின் நண்பரும் கையில் Go Back அமித்ஷா என்ற வாசகம் கூடிய ஒரு பேனர் வைத்துக்கொண்டு CAA வை எதிர்த்து கோஷமிட்டனர் .இதை கவனித்த கட்சிக்காரர்கள் அவர்களை அமைதியாக இருக்க சொன்னார்கள் .ஆனால் அவர்கள் கேக்காமல் மூன்றாவது மாடியிலிருந்து சாலையில் சென்ற பிஜேபி கட்சிக்காரர்களை பார்த்து கத்திக்கொண்டிருந்தனர் .
பிறகு அமித்ஷாவும் மற்ற கட்சி நிர்வாகிகளும் அங்கிருந்து சென்றபிறகு ,அவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர் அங்கு வந்து சூர்யாவை வீட்டை காலி பண்ண சொல்லி வற்புறுத்தினார்.இதில் கட்சிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து அப்படி சொன்னாரா ?அல்லது அந்த வீட்டு உரிமையாளர் பிஜேபி கட்சிக்காரரா என்று தெரியவில்லை .எப்படியோ CAA எதிர்ப்பால் ஒருவர் டெல்லியில் வீடிழந்து தவிக்கிறார் .அவர் கேரளா கொச்சி பகுதியை சேர்ந்தவர் .