அமலுக்கு வந்தது 21 நாள் முழு முடக்கம்…..உசிரு முக்கியம் வீட்டை விட்டு வெளியே வராதீங்க….

 

அமலுக்கு வந்தது 21 நாள் முழு முடக்கம்…..உசிரு முக்கியம் வீட்டை விட்டு வெளியே வராதீங்க….

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் முழு முடக்கம் அமலுக்கு வந்தது. மக்கள் தங்களது விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றி கொள்ள முடக்க நாட்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மிக மிக அவசியம்.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கழியும் போதும் அதிகரித்து கொண்டே போகிறது. மேலும் உயிர் இழப்புகளும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி

அதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கின. இருப்பினும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் மோடி நேற்று அதிரடியாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழுமையாக முடக்கப்படுகிறது என அறிவித்தார்.

பலசரக்கு கடை

இந்த முடக்கம் சில மணி நேரங்களுக்கு முன் அமலுக்கு வந்தது. இந்த முடக்கத்தால் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. காய்கறி, பலசரக்கு, மெடிக்கல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்திருக்கும். இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வீட்டுக்குள்ளே இருங்க. வீட்டை வெளியே சென்றால் கொரோனா வைரஸ் உங்களை தொற்ற வாய்ப்புள்ளது. உங்களால் உங்க குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். இதனை மனதில் வைத்து கொண்டு வீட்டை வெளியே செல்வதை தவிருங்கள்.