அமமுக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு : ஜெ.நினைவிடத்தில் நாளை டிடிவி தினகரன் அஞ்சலி !

 

அமமுக கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு : ஜெ.நினைவிடத்தில் நாளை டிடிவி தினகரன் அஞ்சலி !

உரிய விளக்கம் அளித்து விட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சி இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு கட்சியும்,  டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கட்சியும் செயல்படத் தொடங்கின. அதன் பின்னர் தினகரன், அதிமுகவையும் அதன் சின்னத்தையும் மீட்டெடுக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறைக்குச் சென்றதால் தினகரன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 

tn

அமமுக கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முயற்சியை மேற்கொண்டார். அதன் படி, இந்த கட்சியைப் பதிவு செய்வதற்கு எந்தவித ஆட்சேபனை  இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிராகப் பல மனுக்கள் குவிந்தன. அதற்கெல்லாம் உரிய விளக்கம் அளித்து விட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டது. 

ttn

இதற்காக, புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவின் ஆசிகளை பெற கழகப் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் சென்னை கடற்கரையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று நாளை காலை 11 மணிக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். அவருடன் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அமமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.