அப்பா முதல்வரானால் மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்: உதயநிதி ஸ்டாலின் கருத்து!

 

அப்பா முதல்வரானால் மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்: உதயநிதி ஸ்டாலின் கருத்து!

கூடிய சீக்கிரம் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் அமையும். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் மக்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளும் நிறைவேற்றப் படும் என்று மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் தி.மு.க  இளைஞரணி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று திறந்து வைத்தார். அதில் பேசிய அவர், பகுதிக்கு 10 ஆயிரம் உறுப்பினர்கள் என 30 லட்சம் உறுப்பினர்களை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்க போவதாக கூறியுள்ளார். 

Udhayanidhi stalin

இந்த முகாமில் இளைஞர்களின் எழுச்சியை கண்டால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் மேல் கூட செல்லும் என்பது உறுதி. மேலும், கூடிய சீக்கிரம் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் அமையும். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் மக்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளும் நிறைவேற்றப் படும் என்று மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.