அப்பா போன்ற ஆசிரியரால் அபார்ஷன் செய்யப்பட்ட மாணவி-பள்ளிக்கு போன மாணவி வாத்தியரால் பல முறை பலாத்காரம்..  

 

அப்பா போன்ற ஆசிரியரால் அபார்ஷன் செய்யப்பட்ட மாணவி-பள்ளிக்கு போன மாணவி வாத்தியரால் பல முறை பலாத்காரம்..  

ஒரு பள்ளிக்கு ஆசிரியரை தெய்வமாக நம்பித்தான் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறோம் .ஆனால் அந்த ஆசிரியர்கள் மீது இன்று பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது சர்வசாதாரணமாகிவிட்டது .

ஒரு பள்ளிக்கு ஆசிரியரை தெய்வமாக நம்பித்தான் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறோம் .ஆனால் அந்த ஆசிரியர்கள் மீது இன்று பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது சர்வசாதாரணமாகிவிட்டது .இப்படித்தான் ஒரு ஏழாம் வகுப்பு மாணவியை ஒரு ஆசிரியர் பலாத்காரம் செய்த விஷயம் வெளி வந்துள்ளது.

crime

சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தின் நாராயன்பூரில் கன்யா பள்ளியின் ஆசிரியர் ரஷீத் கான் என்பவர் தன்னுடைய வகுப்பில்  ஏழாம் கிளாஸ் படிக்கும்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக  நேற்று மாலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த மாணவியை அந்த ஆசிரியர் ரஷீத்கான் பல முறை பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமடைந்துள்ளார்.அதனால் அந்த ஆசிரியர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து கருக்கலைப்பும்  செய்துள்ளார் .அவர் அந்த மாணவியை மயக்க நிலையில் பலாத்காரம் செய்ததாகவும்,பிறகு அவர் கர்ப்பமடைந்த போது தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலே பள்ளிக்கு வந்ததகாவும் அந்த மாணவி கூறினார் .பிறகு  இதைப்பற்றி தன்னுடைய குடுமபத்தினரிடம் கூறியபோது அவர்கள் அந்த ஆசிரியர் ரஷீத் மீது போலீசில் புகார் தந்தனர் .
போலீசார் வழக்கு பதிவு செய்து,தலை மறைவாக உள்ள அந்த ஆசிரியரை தேடி வருகின்றனர்.