அப்பாவுக்கே விபூதி அடித்த மகன்! இணையத்தில் பரவும் வைரல் போட்டோ 

 

அப்பாவுக்கே விபூதி அடித்த மகன்! இணையத்தில் பரவும் வைரல் போட்டோ 

யாரையாவது பயமுறுத்துவது அல்லது ஏமாற்றுவது போன்ற ‘பிராங்க்’ விடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெகுவாக  ரசிக்கப்படுகிறது. நாம எது போட்டாலும் ரசிக்கிற கூட்டம்தான் இருக்கே என்பதற்காகவே சிலர்  கிறுக்குத்தனமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். அப்படி ஒரு பையன் தனது சொந்த அப்பாவையே பல நாட்களாக பிராங்க் செய்து வெளியிட்ட வீடியோ இப்போ ஏகத்துக்கும் வைரலாகியுள்ளது!.

யாரையாவது பயமுறுத்துவது அல்லது ஏமாற்றுவது போன்ற ‘பிராங்க்’ விடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெகுவாக  ரசிக்கப்படுகிறது. நாம எது போட்டாலும் ரசிக்கிற கூட்டம்தான் இருக்கே என்பதற்காகவே சிலர்  கிறுக்குத்தனமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். அப்படி ஒரு பையன் தனது சொந்த அப்பாவையே பல நாட்களாக பிராங்க் செய்து வெளியிட்ட வீடியோ இப்போ ஏகத்துக்கும் வைரலாகியுள்ளது!.

reddit-viral-photo-01

Seeman The Sailor என்ற தம்பி ‘ரெட்டிட்’டில்  அவனது அப்பாவிற்கு தெரியாமல் அவர் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் வீட்டின் மேல் சுவரில் ஒட்டி வைக்க ஆரம்பித்துள்ளான் அந்த சிறுவன்.

சில நாட்கள் வரை அவன் ஒட்டிவைத்ததை அவனது அப்பா கண்டுபிடிக்கவில்லை. இதனால் உற்சாகமான அந்த தம்பி ,காலையில் ப்ரேக்   ஃபாஸ்ட் சாப்பிடுவது போல், அவனது அப்பாவின் பொருள்களை ஆட்டையைப் போட்டு ஓட்டுவதை தொடர்கதையாகச் செய்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் தான் ஒட்டி வைத்தை அப்படியே போட்டோ எடுத்து வரிசையாக ‘ரெட்டிட் ‘ தளத்தில் பதிவு செய்திருக்கிறான்.

முதல் நாளில், அவனது தந்தையின் கண்ணாடியை  சுவரில் ஒட்டி வைத்திருந்த  ஒரு படத்தை வெளியிட்டு அதற்கு கீழே ‘நான் என் அப்பாவின் கண்ணாடியை சுவரில் மாட்டினேன். இதுவரை அவர் கண்டுபிடிக்கவில்லை, இனி வரிசையாக நான் அவருடைய உடைமைகளில் ஒவ்வொன்றாக எடுத்து ஒட்டிவைப்பேன் என்றும் பதிவிட்டிருந்தான். இந்த பதிவு 30000 லைக்குகளை பெற்றது.

இரண்டாவது நாளில், அவன் தனது அப்பாவின் மொபைல் போனின் பின்புற கவரை ஒட்டி வைத்திருக்கிறான். அவனது அப்பாவால் அதையும்  கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மூன்றாவது நாளில் ஒரு செருப்பு மற்றும் ரிமோட்டை எடுத்து ஒளித்து வைத்ததனால் மாட்டிக்கொண்டான். அவன் மாட்டிக்கொண்ட பிறகு, தான் இதுவரையில் மறைத்து வைத்த அத்துனை பொருட்களையும் போட்டோ எடுத்து பதிவிட்டான். அதுவும் இணையத்தில் அநியாயத்துக்கு வைரலாகி வருகிறது! 

இதுவும் அவனது அப்பாவுக்கு தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. அலட்டிக்கொள்ளாமல் கூலாக ‘சுட்டிப் பையன்’ என்று சொல்லி கட்டிப்பிடித்து கொஞ்சியிருக்கிறார். இதுவே,நம்ம ஊராயிருந்தால் தலைகீழாக கட்டி வச்சு தோலை உருச்சிருக்க மாட்டாங்கெ..!?