அபியை தூண்டிவிட்ட சாக்ஷி: மீண்டும் வலுக்கும் புதிய சண்டை! 

 

அபியை தூண்டிவிட்ட சாக்ஷி: மீண்டும் வலுக்கும் புதிய சண்டை! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தொடங்கி விறுவிறுப்பாக 10நாள் கடந்து விட்டது. கோபம், அன்பு, பொறாமை என்று போட்டியாளர்களின் நடவடிக்கையை பார்த்து ரசிகர்கள் அவரவர் குணத்தை புரிந்து கொண்டனர். அதில் ரசிகர்கள் மனதில் மிகவும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது மீரா, அபிராமி மற்றும் வனிதா. ஏனென்றால் இவர்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸ்யுடன் காரணமே இல்லாமல் சண்டை போடுவது தான். 

நாளுக்கு நாள் இவர்கள் பிரச்சனை குடிகொண்டு செல்வதால் இவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபி மற்றும் மீரா இருப்பதால் கண்டிப்பாக இவர்களுள் ஒருவரை வெளியேற்றியே தீருவோம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அபிராமி, முகனை தன்னுடன் அழைத்து சென்று வந்து, ‘இவன் என் நண்பன், என்னுடையே buddy, எவளுக்காவது பிரச்னை இருந்த உங்களோட வெச்சிக்கோங்க. நான் லவ் பண்ண, அவன் மூஞ்சி பார்த்து சொல்லுவேன். எங்களுக்குள்ள எதாச்சினா நாங்க பார்த்துக்குறோம்’ என்று மிகவும் கோபமாகக் கூறிவிட்டுக் கிளம்புகிறார். 

மறைமுகமாக அபி யார திட்டுறாங்க….? ரொம்ப யோசிக்க வேண்டாம், இந்த பூகம்பம் வெடிக்க முக்கிய காரணம் நேற்று சாக்ஷி மீரா, முகனிடம் பேசிக்கொண்டதைத் தப்பாகப் புரிந்து கொண்டு அவர் உள்ளே சென்று வனிதா, அபியிடம் கூறியது தான். ஆகையால் சாக்ஷி மூலம் இன்று வீட்டிற்குள் ஒரு புது பூகம்பம்  கிளம்பியுள்ளது.