அன்புமணி ராமதாஸ் பற்றி மருத்துவர் ஷாலினி கருத்து?!..

 

அன்புமணி ராமதாஸ் பற்றி மருத்துவர் ஷாலினி கருத்து?!..

நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரங்கேறிய சாதி வெறியாட்டத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், அன்புமணி ராமதாஸ் பற்றி மருத்துவர் ஷாலினி ஒரு பதிவிட்டுள்ளார். அன்புமணி ராமதாஸ் சாதியத்தை அடக்கவில்லை என இதில் சாடியுள்ளார்.

மருத்துவர் ஷாலினி:

shalini

நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை. மருத்துவம் என்பது அதிலும் குறிப்பாக மனநல மருத்துவம் என்பது நிறைய சோகம் நிறைந்த பணி. இந்த நோய்களே இல்லாமல் இருந்திருக்க கூடாதா?! என்று எண்ணும் அளவிற்கு பல விதமான மனித துயரங்களை தினமும் பார்க்க வேண்டிய பணி. இதில் பெருமை எங்கிருந்து வரும்?!
ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது….. நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி எம் நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையரா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால் என் கல்லூரியில் தான் மரு அன்புமணி ராமதாஸும் படித்தார். அவர் மட்டும் ஏன் இப்படி ஜாதி வெறியர்களை இன்னும் அடக்காமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, கல்லூரி அல்ல, முக்கியம். கற்றவை தான் முக்கியம் என்றே தோன்றுகிறது.

இதையும் வாசிக்க: ‘ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி’ : மருதநாயகம் பாடலை வெளியிட்ட கமல் ; எதற்காக தெரியுமா?