அன்னையர் தினத்தில் இரட்டை குழந்தைகளுக்கு அன்னையான பிரபலம்

 

அன்னையர் தினத்தில் இரட்டை குழந்தைகளுக்கு அன்னையான பிரபலம்

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா

சமூக போராளியான இரோம் சர்மிளாவுக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. 

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. அதுமட்டுமின்றி அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமான தோல்வியை தழுவினார். இதையடுத்து தமிழகத்தின் கொடைக்கானலில் தஞ்சமடைந்த இரோம் சர்மிளா. கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானல் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என சமூக செயற்பாட்டாளர் திவ்யா பாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அன்னையர் தினத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இரோம் சர்மிளாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.