‘அந்த இயக்குநர்’ என் மார்பகத்தை காட்ட சொன்னார்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர் தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
படவாய்ப்புக்காகத் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகப் பிரபல நடிகை சுர்வீன் சாவ்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக நடிகைகள் பலர் புகார் கூறினார். குறிப்பாக நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர். அந்த வரிசையில் இணைந்துள்ளார் நடிகை சுர்வீன் சாவ்லா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர் தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘படவாய்ப்புக்காகச் சென்ற இடத்தில் இயக்குநர் ஒருவர் உங்கள் மார்பை பார்க்க வேண்டும் என்றார். இன்னொரு இயக்குநர் உங்கள் தொடையைக் காட்டுங்கள் என்று கேட்டார். சினிமாவில் வாய்ப்பு கேட்டு சென்ற 5 இடங்களில் இதுபோன்ற பாலியல் சீண்டல்களைச் சந்தித்துள்ளேன்’ என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். சுர்வீன் சாவ்லாவின் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.