அந்தரங்க போட்டோக்களை திருடி மிரட்டுகிறார்கள்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!?

 

அந்தரங்க போட்டோக்களை திருடி மிரட்டுகிறார்கள்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!?

நடிகை மீரா மிதுன்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

சென்னை: நடிகை மீரா மிதுன்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

meera

தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடலிங் அழகியான இவர்மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். மேலும் மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குநராகவும் பணி புரிந்து  வருகிறார். 

meera

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , ‘மே 3-ம்தேதி மிஸ் தமிழ்நாடு டீவா  2019 என்ற நிகழ்ச்சியை சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தப்போவதாக அறிவித்தேன். இதனைத் தடுக்கும் வகையில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அஜித் ரவி என்னுடன் பணிபுரிந்தவர். தொழில் போட்டி காரணமாக எனது  செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடி மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் புது புது செல்போன் அழைப்புகளிலிருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது’ என்றார்.

meera

தமிழ் பெண்களுக்கு அழகி போட்டிகளில் முக்கியத்துவமும், வாய்ப்பும் கிடைப்பதில்லை. இது நான் தமிழ் பெண்களுக்காகவே நடத்தவிருக்கும் போட்டி. அதனால் 2 பேரும் அதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுப்பதோடு, ஜூன் 3-ம்தேதி வடபழனி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள அழகி போட்டிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.