அத்தைக்காக பவுடர் பூசிய டி.டி.வி.தினகரன்… மீண்டும் மேக் -அப் போடுகிறார் சசிகலா..?

 

அத்தைக்காக பவுடர் பூசிய டி.டி.வி.தினகரன்…  மீண்டும் மேக் -அப் போடுகிறார் சசிகலா..?

சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்ததும் அதிமுகவின் ஒற்றைத் தலைமயாகி மீண்டும் ஜெயலலிதாவை போல மாறி மேக் அப் போட்டுக் கொள்வாரா?

பரபரப்பான நிலையில் இன்று கூட உள்ளது அதிமுக பொதுக்குழு.  இந்த  முக்கிய கூட்டத்தில் ஒரு தரப்பு, ஓ.பி.எஸை தான் அம்மா நியமித்தார். எடப்பாடியை சசிகலா நியமித்தார். அவரை கட்சியில் இருந்து தூக்கி விட்டோம். அவரால் நியமிக்கப்பட்ட உங்களை எப்படி ஏற்க முடியும்? தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மக்கள் இன்னும் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. sasikala

அம்மாவால் அதிகம் சுட்டிக்காட்டப்பட்ட நபரான ஓ.பி.எஸை மீண்டும் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம் வைத்து இருக்கிறார்களாம். 

இன்னொரு புறம்  ஒற்றை தலைமை… அது சசிகலா மட்டும்தான் என்கிற கோஷத்தை ஸ்லீப்பர் செல்கள் மூலம் அந்த கூட்டத்தில் எழுப்ப ஆட்களை தயார் செய்து வைத்து இருக்கிறார்  டி.டி.வி.தினகரன்.  ஆனால், அவர்களையும் எடப்பாடி தரப்பு அடக்கி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. sasikala

ஆனால் இவர்கள் டி.டி.வி.தினகரன் தரப்பிடம் பல லட்சங்களை வாங்கி விட்டனர். அதற்காக பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவில் கூட்டத்தில் சசிகலா பெயர் அடிபட வேண்டும். இரட்டை தலைமைக்கு மாற்று சசிகலா என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்  என்று சிலருக்கு டி.டி.வியிடம் இருந்து கட்டளை பறந்திருப்பதாக கூறுகிறார்கள். sasikala

அத்தை சசிகலாவுக்காக அதிமுக பொதுக்குழுவில் சிலருக்கு பவுடர் பூசி விட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்ததும் அதிமுகவின் ஒற்றைத் தலைமயாகி மீண்டும் ஜெயலலிதாவை போல மாறி மேக் அப் போட்டுக் கொள்வாரா? என்பது இன்று பொதுக்குழுவிற்கு பிறகு ஓரளவு கணித்து விடலாம்.