அத்துமீறிய வாலிபரின் ஆண் உறுப்பு ‘நறுக்’

 

அத்துமீறிய வாலிபரின் ஆண் உறுப்பு ‘நறுக்’

இளம்பெண் ஒருவர் தன்னிடம் அத்துமீறிய வாலிபரின் ஆணுறுப்பை நண்பர்களின் துணையோடு அறுத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: இளம்பெண் ஒருவர் தன்னிடம் அத்துமீறிய வாலிபரின் ஆணுறுப்பை நண்பர்களின் துணையோடு அறுத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டாம்பிவாலி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நீண்ட நாட்களாக அப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து சீண்டியுள்ளார்.

இதை நிறுத்திக் கொள்ளுமாறு பலமுறை அப்பெண் எச்சரிக்கை விடுத்தும், அந்த நபர் காதில் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாலிபரின் சீண்டல்கள் அத்துமீறியுள்ளது. இனியும் பொறுக்க முடியாது என முடிவெடுத்த அப்பெண், ரயில்வே தண்டவாளம் ஓரமாக அந்த வாலிபரை அழைத்துள்ளார்.

அவரும் பெண்ணின் அழைப்பை ஏற்று, ஆசையாக வந்த சமயத்தில், அங்கு மறைந்திருந்த பெண்ணின் நண்பர்கள் கண்ணையா மற்றும் தேஜாஸ் இருவரும் அந்த நபரை அடித்துத் துவைத்துள்ளனர். அதோடு இன்றி, அவரின் ஆண் உறுப்பையும் அறுத்து எறிந்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பியுள்ளனர். 

ரத்த வெள்ளத்தில் ஓரமாகக் கிடந்த அந்த நபரை பார்த்த சிலர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அந்த வாலிபரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார், இளம்பெண் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.