அத்தி வரதர் தரிசனம்: இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பக்தர்கள் மோதல்; 2 பேர் மண்டை உடைப்பு!

 

அத்தி வரதர் தரிசனம்: இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பக்தர்கள் மோதல்; 2 பேர் மண்டை உடைப்பு!

அத்தி வரதர் தரிசனத்தின் போது வி.வி.ஐ.பி தரிசன வரிசையில் நின்றிருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டதில்  2 பேர் காயமடைந்துள்ளனர். 

அத்தி வரதர் தரிசனம்: இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பக்தர்கள் மோதல்; 2 பேர் மண்டை உடைப்பு!

காஞ்சிபுரம் : அத்தி வரதர் தரிசனத்தின் போது வி.வி.ஐ.பி தரிசன வரிசையில் நின்றிருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டதில்  2 பேர் காயமடைந்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கூட்ட  நெரிசல் காரணமாக வி.வி.ஐ.பி தரிசன வரிசையில் நின்றிருந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். இதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அத்தி வரதர் மீண்டும் குளத்திற்குள் செல்ல இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால்  மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.