அதிர்ச்சியில் லொஸ்லியா! எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய வனிதா

 

அதிர்ச்சியில் லொஸ்லியா! எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய வனிதா

சாண்டி அழுகிற பிக்பாஸ் ப்ரோமோ தான் நேற்றிலிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிக்பாஸ் ரசிகர்களை வேதனையடைய வைத்திருக்கிறது. இன்று வெளியான இரண்டாவது பிக்பாஸ் ப்ரோமோவில் சாண்டி அழுதுக் கொண்டே கவிதை காமெடி செய்துள்ளார். சாண்டியின் இந்த செயல், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில், பார்வையாளர்களை வைத்து போட்டியாளர் இடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியாளர்களும் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினார்கள். அப்படி வெளிப்படையாக பேசியதில், போட்டியாளர்கள் பலரது உண்மை முகத்தை பார்க்க முடிந்தது. வனிதா விஜயகுமார்

இந்த நிலையில் இன்று ஓபன் நாமினேஷன் இடம்பெற்றுள்ளது. சாண்டியின் மாற்றத்திற்கு லொஸ்லியா தான் காரணம் என்று கூறுகின்றனர். அதனால் இருவரும் வெளியே செல்ல வேண்டும் என்று நாமினேட் செய்கின்றனர். சாண்டியின் நாமினேசன் பற்றி தெரிந்ததும், தேம்பித் தேம்பி அழுகிறார். வழக்கம் போல விமர்சனம் செய்கிறார் வனிதா. அப்போது சாண்டிக்கு வனிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.