‘அதிமுக தொண்டர்களை தொட்டுப் பார்க்க முடியாது’ : ஸ்டாலினுக்கு சாவல் விட்ட எடப்பாடி!

 

‘அதிமுக தொண்டர்களை தொட்டுப் பார்க்க முடியாது’ : ஸ்டாலினுக்கு சாவல் விட்ட எடப்பாடி!

ஓமலூர்: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என்ற முக ஸ்டாலினின் அழைப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ஓமலூர்: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும் என்ற முக ஸ்டாலினின் அழைப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

stalin

அமமுகவிலிருந்து விலகி தேனி நிர்வாகிகள் பலரும் தங்க தமிழ்செல்வன் கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். இதையடுத்து நேற்று தேனியில் அமமுக தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

stalin

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை, தற்போது நடந்துவிட்டது. நாங்கள் கனவு காணவில்லை அதிமுக ஆட்சி கவிழ்வது விரைவில் நடக்கத்தான் போகிறது’ என்றார்.

edappadi

இந்நிலையில் இன்று ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது’ என்று கூறி ஸ்டாலினின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்தார். முதல்வர் கூறிய இந்த பதிலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.