அதிமுக- கமல் கட்சியின் லட்சணம் இவ்வளவுதான்… ரஜினியிடம் புட்டுப்புட்டு வைத்த பிரசாந்த் கிஷோர்..!
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., – தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் பிரசாந் கிஷோருடன் ரஜினி விவாதித்துள்ளார்.
2021 ல் நடைபெறும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்கிற வேட்கையில் தமிழக அரசியல் கட்சிகள் எத்தைத் திண்றால் பித்தம் தெளியும் என்கிற ரீதியில் முட்டி மோதி வருகின்றன.
தமிழகத்தில், 2021ம் ஆண்டில் நடக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சி துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்காக தனது ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார். பிற கட்சியினரின் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.
மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில் அகில இந்திய அளவில் பிரச்சார வியூகராகக் கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் நடத்தி வரும் நிறுவனம் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்துள்ளது. கடந்த, 2014 மக்களவை தேர்தலில் மத்தியில், பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.
சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தார்.தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை, அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் ஆகியோர் ஏற்கனவே பிரசாந்த் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில ரஜினிகாந்தும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், ‘தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., – தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் பிரசாந் கிஷோருடன் ரஜினி விவாதித்துள்ளார். தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் தரப்பினர் எடுத்துள்ள சர்வே குறித்தும் பேசப்பட்டு உள்ளது’ அடுத்த கட்டம் குறித்து இருவரும் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.