அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வேன்! – ஆ.ராசா பரபரப்பு பேச்சு

 

அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வேன்! – ஆ.ராசா பரபரப்பு பேச்சு

அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்த அனைத்து தலைவர்களும் நிச்சயம் சர்க்காரியா கமிஷன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

அந்த அளவிற்கு கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகவே சர்க்காரிய கமிஷன் என்ற வார்த்தை மாற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் பல்வேறு விளக்கங்களை கொடுத்திருந்தாலும், இன்று வரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த வார்த்தை உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, “இன்று வரை கூட்டங்களில் பேசும் அதிமுக தலைவர்கள், விஞ்ஞானப் பூர்வமாக கருணாநிதி ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி ஒரு வார்த்தை சர்க்காரியா கமிஷனில் இடம் பெற்றிருப்பதை நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறேன்” என அதிமுகவிற்கு சவால் விடுத்துள்ளார்.