அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள்: உதயநிதி அதிரடி பேச்சு!
ஊழலில் திளைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை: ஊழலில் திளைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக அரசைக் கண்டித்து, கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘திமுக என்றாலே போராட்டம் தான், நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் இந்தக் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கி இருக்கிறோம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.