அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

 

அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தன்னை சந்தித்து ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக பரபரப்பு தகவலை தினகரன் தெரிவித்திருந்தார்.

சந்தித்தது உண்மை தான், ஆனால் ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசவில்லை என ஓபிஎஸ் நேற்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை. அதிமுகவில் இணைய வேண்டும் என தினகரன் முடிவு செய்தாலும், அவர்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார்.