அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா – தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து
இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
மும்பை: இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. விளையாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து, இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் உட்பட எந்தவொரு பொதுக்கூட்டமும் இல்லாமல் விளையாடப்படும் என்று பிசிசிஐ நேற்று அறிவித்தது.
NEWS: BCCI, CSA announce the rescheduling of the ongoing @Paytm ODI series #INDvSA
More details ? https://t.co/9as9JoX7tG pic.twitter.com/IIvXLLurmy
— BCCI (@BCCI) March 13, 2020
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே கைவிடப்பட்டது.