“அதப்பத்தி யாருக்கும் சொல்லனுனு அவசியம் கிடையாது”… காதலி பற்றிய கேள்வியால் பொங்கிய விஜய் தேவரகொண்டா!

 

“அதப்பத்தி யாருக்கும் சொல்லனுனு அவசியம் கிடையாது”… காதலி பற்றிய கேள்வியால் பொங்கிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா தான் தற்போதைக்கு பெண்களின் ட்ரீம் பாய். இவர் தெலுங்கில் மட்டுமல்ல இந்தியா முழுதும் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளார். கரண் ஜோகர் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டது, ஜான்வி கபூரின் பேவரிட் ஸ்டார் என்று பெயர் பெற்றது என பாலிவுட்டிலும் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறார். இதனால் இவரது காதலி யார் என்ற அனைவருமே ஆர்வம் காட்டுவதில் ஆச்சர்யமில்லைதான்.

விஜய் தேவரகொண்டா தான் தற்போதைக்கு பெண்களின் ட்ரீம் பாய். இவர் தெலுங்கில் மட்டுமல்ல இந்தியா முழுதும் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளார். கரண் ஜோகர் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டது, ஜான்வி கபூரின் பேவரிட் ஸ்டார் என்று பெயர் பெற்றது என பாலிவுட்டிலும் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறார். இதனால் இவரது காதலி யார் என்ற அனைவருமே ஆர்வம் காட்டுவதில் ஆச்சர்யமில்லைதான்.

vijay-dev

இவர் ரஷ்மிகாவுடன் இரண்டு படங்களில் ரொமான்ஸ் செய்ததால், நிஜ வாழ்க்கையிலும் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர் என்றொரு பேச்சு அடிபட்டது. இருவரும் அதற்கு நோ என்று சொல்லிவிட்டார்கள். 

vijay-devarakonda

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அவரது காதல் வாழ்க்கைப் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அதைப் பற்றிக் கூறமுடியாது. அப்படியே காதல் செய்தாலும் அதை மிகவும் ரகசியமாக வைத்திருப்பேன், அதைப் பற்றிச் சொல்வதில் என்ன பயன்? யாருக்கும் இதை தெரிந்துகொள்ள வேண்டிய  அவசியம் இல்லை.  காதல் பற்றி நான் என் பெற்றோரிடமும் என் நண்பர்களிடமும் சொல்வேன். அது நடக்கும் போது நான் அதை உலகுக்கு வெளிப்படுத்துவேன், ஆனால் அதற்கு நேரம் இருக்கிறது. எனது காதல் வாழ்க்கை பொழுதுபோக்காக மாற நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.