அண்ணனை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த தம்பி!
Aug 14, 2019, 20:54 IST1565796264000
அரியலூர் மாவட்டத்தில் சொந்த அண்ணனை, அவரது தம்பியே குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சொந்த அண்ணனை, அவரது தம்பியே குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமானூர் அருகே உள்ள திரு வெங்கனூர் கிராமத்தில் சேர்ந்தவர் உத்திராபதி. இவருடைய மகன்கள் சுபாஷ், தினேஷ், சுரேஷ்.சுபாஷ் லாரிக்கு கடன் தவணை கட்ட வேண்டிய பணத்தை எடுத்து நண்பர்களுடன் குடித்ததாக தெரிகிறது.
இதனால் சுபாஷ்,சுரேஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து அண்ணன் சுபாஷை குத்திக்கொலை செய்துள்ளார்.தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.