அணில்களை குழந்தைகள் போல் வளர்க்கும் இளம்பெண்: டிக் டோக்கில் வைரலானது இப்படித்தான்!?

 

அணில்களை குழந்தைகள் போல் வளர்க்கும் இளம்பெண்: டிக் டோக்கில் வைரலானது இப்படித்தான்!?

அணில் குட்டிகளுடன் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு வரும் பெண் ஒருவர், அந்த குட்டிகளைக் குழந்தைகள் போல் பராமரித்து வருகிறார். 

காஞ்சிபுரம் : அணில் குட்டிகளுடன் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு வரும் பெண் ஒருவர், அந்த குட்டிகளைக் குழந்தைகள் போல் பராமரித்து வருகிறார். 

anil

காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே வசிப்பவர்  சாமுண்டீஸ்வரி. ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வரும் இவர் அந்த கடையிலிருந்து நான்கு  அணில் குட்டிகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிலிருந்து அணில்  குட்டிகளை உணவளித்துப் பராமரித்து வருகிறார். பொதுவாக மனிதர்களின் சத்தத்தைக் கேட்டாலே தலைதெறிக்க ஓடும் இந்த அணில்கள்   சாமுண்டீஸ்வரியின் குரலுக்குக் கட்டுப்பட்டு அவர் மீது ஏறி சர்வசாதாரணமாக விளையாடுகின்றன. 

anil

அணில்களுடன் சேர்ந்து இவர் பதிவிடும் டிக் டோக்  வீடியோக்களின்  மூலம் பிரபலமாகி வருவதாகக் கூறும் அவர் குழந்தைகள் இல்லாத தனக்கு அணில்களே  குழந்தைகள் என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.