அட்லீயின் அடுத்த படம் இவருடன் தான்…! சீக்ரெட்டை உடைத்த இயக்குநர்
நான் அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். விரைவில், இணைந்து சிறந்த படைப்பைக் கொடுப்போம்
இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஷாருக்கான் – நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது பாலிவுட் செல்ல இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அட்லீ, ‘நான் அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். விரைவில், இணைந்து சிறந்த படைப்பைக் கொடுப்போம் ‘ என்றார்.
இதனிடையே ஷாருக் கான்- அட்லீ கூட்டணி அமைக்கவிருப்பதை தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த பிகில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், அட்லீ ஷாருக்கானை இயக்கப் போகிறார்.
ஆனால் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்று தெரியாது. ஷாருக்கான் ரசிகராக நான் இந்த கூட்டணிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ என்றார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.