அட்டக்கத்திக்கு ஓட்டம் பிடித்த விசாகபட்டினம் போலீஸ்!

 

அட்டக்கத்திக்கு ஓட்டம் பிடித்த விசாகபட்டினம் போலீஸ்!

விசாகப்பட்டினத்தில் போதை ஆசாமியிடம் இருப்பது அட்டக்கத்தி என்று தெரியாமல் போலீசார் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று விசாகபட்டினம் த்ரி டவுண் போலீஸ் நிலையத்துக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் போதை ஆசாமியிடம் இருப்பது அட்டக்கத்தி என்று தெரியாமல் போலீசார் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று விசாகபட்டினம் த்ரி டவுண் போலீஸ் நிலையத்துக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர், உடா திரையரங்குகளில் ஒருவர் குடித்துவிட்டு தகராறு செய்துகொண்டிருக்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

andra police

இதை அடுத்து போலீசார் அந்த திரையங்கத்துக்கு சென்றுள்ளனர். போலீசை கண்ட அந்த போதை ஆசாமி, தன்னிடமிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு போலீசாரை விரட்டியுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து, ஒரு வழியாக அவரை பிடித்து கையிலிருந்த கத்தியை லாவகமாகக் கைப்பற்ற முயன்றனர். அப்போதுதான் அது உண்மையான கத்தி இல்லை, அட்டக்கத்தி என்பது தெரியவந்தது. இந்த அட்டக்கத்திக்காக இவ்வளவு அட்டகாசம் என்று நொந்த போலீசார், அந்த ஆசாமி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அட்டைக் கத்தியுடன் போதை ஆசாமி விரட்டியதும், அவருக்கு பயந்து பொது மக்களும் போலீசாரும் ஓட்டம் பிடித்தது விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.