’அட்ஜஸ்மெண்டுக்கு தயாராக இல்லாததால் 30 பட வாய்ப்புகளை இழந்தேன்’மருகும் மல்லிகைப்பூ நடிகை…

 

’அட்ஜஸ்மெண்டுக்கு தயாராக இல்லாததால் 30 பட வாய்ப்புகளை இழந்தேன்’மருகும் மல்லிகைப்பூ நடிகை…

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பள் ஆக பல வருடங்களாக சித்தரிக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார்

’சினிமாவில் ஆணாதிக்கத்தின் பிடி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பெண்ணுரிமை பேசினேன் என்கிற ஒரே காரணத்துக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் நான் 30க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்’ என் ஷாக் கொடுக்கிறார் நடிகை மல்லிகா ஷெராவத்.

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பள் ஆக பல வருடங்களாக சித்தரிக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.ஜாக்கிசானுடன் ‘தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத்துக்கு கடந்த 3 வருடங்களாக படங்கள் இல்லை.

mallika

நடிகர்களும் இயக்குனர்களும் அவரை ஒதுக்குவதால் தற்போது இணையதள தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திட்டமிட்டு தன்னை ஓரம்கட்டுவதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்துப் பேசிய “நான் சினிமாவை விட்டு விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் அடிக்கடி பெண் உரிமைகள் பற்றி பேசிவருகிறேன். படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தால் நம்மிடமும் இப்படித்தான் பேசுவாள் என்று என்னை கதாநாயகர்கள் ஒதுக்குகிறார்கள். காரணம் சினிமா முழுக்க முழுக்க ஆண்களின் பிடியை விட்டு வெளியே வரவேயில்லை.

mallika

எனக்கு பதிலாக கதாநாயகர்கள் எல்லா அட்ஜஸ்மெண்டுக்கும் ஒத்துவரும் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக அதிக பட்சம் 30 பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன். இதனால் வருத்தம் அடையவில்லை. இது எனது வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. நான் பெண்கள் பிரச்சினையை பற்றி பேசியபோது எனக்கு நாட்டு பற்று இல்லை என்று விமர்சித்தனர். நான் சில கதாநாயகர்களை விமர்சித்ததால் அவர்களது நெருங்கிய தோழிகளாகிய கதாநாயகிகள் என்னை தரக்குறைவாகப் பேசினார்கள். ஆனால் என் காலம் விரைவில் வரும்’ என்கிறார் 42 வயதை எட்டியிருக்கும் மல்லிகா ஷெராவத்.