அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

 

அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 

ttn

அதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக நீலகிரி மாவட்டம் பர்லியாறில் 4 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.