அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பருவமழை வலுப்பெற்று வருவதால்  கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு, கடந்த சில நாட்களாக மழை நின்று சற்று வெயில் அடிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக மழை ஏதும் பெய்யாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ttn

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 31°C,  குறைந்த பட்சமாக 23°C இதுவரை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 1 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு அரபிக் கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.