அடுத்த சர்ச்சை ஆரம்பம்: ரத்த வெள்ளத்தில் ஹன்சிகா

 

அடுத்த சர்ச்சை ஆரம்பம்: ரத்த வெள்ளத்தில் ஹன்சிகா

ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் காசி கோவில் பின்னணியில், பெண் துறவி வேடம் அணிந்து ஹன்சிகா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாகவும், இளம் பெண்களை திசைத் திருப்பும் விதமாக உள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து ஹன்சிகா மற்றும் மஹா பட இயக்குநர் ஜமீல் ஆகியோர் மீது போலீஸில் புகாரும், வழக்குகளும் தொடரப்பட்டன.

maha

இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான மற்றொரு போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியது. புர்கா அணிந்து முஸ்லீம் பெண் வேடத்தில் ஹன்சிகா நமாஸ் செய்வது போலவும், பின்னணியில் அவர் கையில் துப்பாக்கியுடன் தற்கொலைப் படையாக மாறுவது போலும் காட்சி இடம்பெற்றிருந்தது.

maha

‘மஹா’ படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா போஸ் கொடுக்கிறார். சர்ச்சையை கிளப்பும் வகையில் போஸ்டர்கள் இருந்தாலும், ஹன்சிகா கெத்தாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

maha

சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போஸ்டர்களை வெளியிடவில்லை, கதைக்கு தேவைப்படுகிறது. படத்தை பார்க்கும் போது புரியும் என ‘மஹா’ படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.