அடுத்தவாரம் தொடங்குகிறது ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரசாரம்!

 

அடுத்தவாரம் தொடங்குகிறது ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரசாரம்!

நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 5, 6, 12, 13, 14 ஆகிய தேதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்

நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 5, 6, 12, 13, 14 ஆகிய தேதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி  போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில்  காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி  திமுகவுக்கும், நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் 13 பேர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர்.  விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக  அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேர்காணல்  நடத்தினார். அவர்களில்  புகழேந்தி  என்பவரை தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தார்.

mk stalin

இந்நிலையில் அக்டோபர் 5, 6, 12, 13, 14 ஆகிய தேதிகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவருடன் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும்  பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.