அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்…அதிர்ச்சியில் ஈரோடு காவல்துறை!?

 

அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்…அதிர்ச்சியில் ஈரோடு காவல்துறை!?

பொள்ளாச்சியைப் போல் அதிரவைக்கும் செக்ஸ் புகார்களால் ஈரோடு போலீசார் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று,ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ராதா கிருஷ்ணன் என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

பொள்ளாச்சியைப் போல் அதிரவைக்கும் செக்ஸ் புகார்களால் ஈரோடு போலீசார் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று,ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ராதா கிருஷ்ணன் என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

harrasement

கல்லூரி மாணவி கொடுத்த ஆதாரங்களை வைத்து ராதா கிருஷ்ணனைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் திருமணமான பெண் ஒருவரும் தன்னை மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக,ராதா கிருஷ்ணன் மீது புகார் கொடுத்து போலீசாரை அதிர வைத்திருக்கிறார்.
இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.இவரது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.அப்படி எப்போதோ ராதா கிருஷ்ணன் பழக்கமாகி இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணன் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

rape

கணவருடைய நண்பர்தானே என்று சம்பந்தப்பட்ட பெண்ணும் இயல்பாக பழகியிருக்கிறார்.இதனால்,இருவரையும் சேர்த்து வைத்து சந்தேகத்தோடு சண்டை போட்டிருக்கிறார் குடிகார கணவன்.இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கார்.அப்போது மருத்துவமனைக்கு வந்த ராதா கிருஷ்னன் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

rapist

அதன் பிறகு ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த ராதா கிருஷ்னன்,அந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தாராம்.அதன் பின்னர் இந்த  சம்பவத்தைச் சொல்லி தினமும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இப்போது புகார் தெரிவித்திருக்கிறார்.
இதுபோல் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது! சம்பந்தப்பட்ட  பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வந்தால்,இந்த வழக்கின் போக்கே மாறிவிடும் என்கிறார்கள் உள்ளூர் ஆட்கள் சிலர்!