அடித்து ஆடுங்கள் எடப்பாடி… கவிஞர் தாமரை பாராட்டு!

 

அடித்து ஆடுங்கள் எடப்பாடி… கவிஞர் தாமரை பாராட்டு!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை ஆங்கிலத்தில் முடித்துவிட்டு, பெயருக்கு ஒரு பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்துவிட்டு அரசு வேலை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பிலும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு கவிஞர் தாமரை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை ஆங்கிலத்தில் முடித்துவிட்டு, பெயருக்கு ஒரு பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்துவிட்டு அரசு வேலை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பிலும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து கவிஞர் தாமரை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில், ” 
தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு !
தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று ! 
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !. தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும். ‘தமிழ்நாட்டில் தமிழ்’ என்றுதானே கேட்கிறோம் ?? ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ், கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம்?? அப்புறம் ஏன் கசக்க வேண்டும் ??
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே ! நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக !. நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை !
பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக !
தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும். உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்” என்று கூறியுள்ளார்.