அஜித் பவாரை ப்ளாக் மெயில் பண்ணிட்டாங்க பாஸ்! சிவ சேனா புலம்பல்

 

அஜித் பவாரை ப்ளாக் மெயில் பண்ணிட்டாங்க பாஸ்! சிவ சேனா புலம்பல்

பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்குமாறு அஜித் பவாரை ப்ளாக் மெயில் பண்ணிட்டாங்க என சிவ சேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. அதேசமயம், சிவ சேனாவில் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வேளையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவ சேனா ஆகியவை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தன. குறைந்தபட்ச செயல் திட்டம், முதல்வர், துணை முதல்வர், யார் யாருக்கு எவ்வளவு அமைச்சர்கள் என எல்லாம் பேசி முடித்து விட்டன. அவர்கள் ஆட்சி அமைப்பதுதான் ஒன்றுதான் பாக்கி என்ற நிலையில் இருந்தது.

பகத் சிங் கோஷ்யாரி

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் நேற்று காலையில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை அமைத்தது. அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பா.ஜ.க.வின் இந்த அதிரடி நடவடிக்கை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்சிகளுக்கு பெரிய ஷாக்காக இருந்தது.

கவர்னருடன் அஜித் பவார்

சிவ சேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ.க.வுடன் இணையுமாறு அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார். அவர் கட்டாயம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார். காலை 7 மணிக்கு புதிய அரசு அமைந்துள்ளது. இருளின் மறைவில் பாவங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.