அசுர வேகத்தில் வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட தாய், மகள் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி !

 

அசுர வேகத்தில் வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட தாய், மகள் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி !

நேற்று மாலை மணிமேகலையும்  வர்ஜா ஸ்ரீயும் வீட்டின் அருகே இருந்த மளிகை கடைக்கு சென்றுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அருகே உள்ள மல்லிகுட்டை கிராமத்தில் வசித்து வரும் அறிவரசன்-மணிமேகலை தம்பதிக்கு 1 ஆம் வகுப்பு படிக்கும்  வர்ஜா ஸ்ரீ என்ற மகள் இருந்தார். நேற்று மாலை மணிமேகலையும்  வர்ஜா ஸ்ரீயும் வீட்டின் அருகே இருந்த மளிகை கடைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிரே  பைக்கை அதிவேகமாக ஓட்டிக் கொண்டு ஒரு இளைஞர் வந்துள்ளார். கண்ணிமைக்கும் நொடியில் அந்த நபர் நடந்து சென்றுகொண்டிருந்த மணிமேகலை மற்றும் குழந்தையின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து சாலையில் ரத்த வெள்ளத்துடன் துடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரையும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பைக்கை வைத்து அவர்கள் மீது மோதிய அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

tttn

விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேருக்கும்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மணிமேகலை காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், வர்ஜா ஸ்ரீயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விபத்துக்குக் காரணமான செந்தில் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.