அசுரன் நடிகையை பார்க்கப் போய் அம்மாவை தொலைத்த மகன்..!

 

அசுரன் நடிகையை பார்க்கப் போய் அம்மாவை தொலைத்த மகன்..!

அசுரன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர்.இவரது புதிய படத்தின் சூட்டிங் கொல்லம் மாவட்டம் மலையின் கீழு என்கிற ஊரில் உள்ள கிருஷ்ண சாமி கோவிலில் நேற்று நடந்தது. அருகில் இருக்கும் விளவூர்க்கால் என்கிற இடத்தில் உள்ள டிரஷரிக்கு தனது ஓய்வூதியத்தை வாங்க வந்தார் ஒரு தாய்,தனது மகனுடன்.ட்ரஷரியில் நல்ல கூட்டம்.கியூவில் அம்மாவை நிற்கவைத்து விட்டு வெளியே வந்த மகனுக்கு அருகில் சூட்டிங் நடப்பது தெரிய வந்தது. அதுவும் வந்திருப்பது மஞ்சு வாரியர் என்று அறிந்த பிறகு அவனுக்கு உலகமே மறந்துவிட்டது.சூட்டிங் பார்க்கப் போய்விட்டான்.

அசுரன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர்.இவரது புதிய படத்தின் சூட்டிங் கொல்லம் மாவட்டம் மலையின் கீழு என்கிற ஊரில் உள்ள கிருஷ்ண சாமி கோவிலில் நேற்று நடந்தது.

அருகில் இருக்கும் விளவூர்க்கால் என்கிற இடத்தில் உள்ள டிரஷரிக்கு தனது ஓய்வூதியத்தை வாங்க வந்தார் ஒரு தாய்,தனது மகனுடன். ட்ரஷரியில் நல்ல கூட்டம்.கியூவில் அம்மாவை நிற்கவைத்து விட்டு வெளியே வந்த மகனுக்கு அருகில் சூட்டிங் நடப்பது தெரிய வந்தது. அதுவும் வந்திருப்பது மஞ்சு வாரியர் என்று அறிந்த பிறகு அவனுக்கு உலகமே மறந்துவிட்டது. சூட்டிங் பார்க்கப் போய்விட்டான்.

Manju

ட்ரஷரியில் கியூவில் நின்ற தாய் பென்ஷனை வாங்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால் மகனைக் காணோம். அவனைத் தொடர்பு கொள்ளலாம் என்றால், மகனுடைய செல்ஃபோன் நம்பரும் அம்மாவுக்குத் தெரியாது. காத்திருந்து பொறுமை இழந்த அந்த தாய் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போக முடிவு செய்தார்.ஆட்டோவும் கிடைத்தது.ஆனால் அவருக்கு வழி சொல்லத் தெரியவில்லை. எங்கெங்கோ சுற்றி வெறுத்துப் போன ஆட்டோ டிரைவர் கரிப்பூர் என்கிற இடத்தில் அந்த பெண்மணியை இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அதே இடத்தில் அழுது கொண்டே நின்றிருந்த அவரிடம் விசாரித்த உள்ளூர்காரர்கள்,மலையின்கீழு போலிசுக்கு போன் செய்து வரவழைத்தனர். போலீசார் வந்து அந்த தாயை விசாரித்து அவர் வைத்திருந்த ஆவணங்களை பார்த்தனர். அதிலொன்றில் இருந்த அவரது மகனின் மொபைல் என் கிடைத்தது.
மஞ்சுவாரியரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து சூட்டிங் பார்த்துக்கொண்டு இருந்த மகன் போலீசார் ஃபோன் செய்ததும் பதறி அடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். அவன் தாயை மறந்து விட்டு சினிமா ஷூட்டிங் பார்க்கப் போனதை தெரிந்து கொண்ட போலீசாரும் கரிப்பூர் மக்களும் அந்த மகனுக்கு செம டோஸ் கொடுத்து அனுப்பி வைத்தனர்.