ஃபேஸ்புக் காதலால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; நெல்லையில் நடந்த கொடூர கொலை

 

ஃபேஸ்புக் காதலால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; நெல்லையில் நடந்த கொடூர கொலை

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான்ன பெண்ணை காதலித்து ஏமாற்றி நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நெல்லை: ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான்ன பெண்ணை காதலித்து ஏமாற்றி நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே பேட்டை பகுதியில் வசித்து வந்த இளம்பெண், கம்ப்யூட்டர் செண்டர் ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கு மேலசெவல் அருகே வாணியங்குளத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற ஜேசிபி ஆபரேட்டர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நட்பாகியுள்ளார். இந்த நட்பு காலப்போகஈல் காதலாக மலர்ந்து இருவரும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பேசி வந்ததுடன் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

சுமார் ஆறு மாதங்களாக இந்த காதல் தொடர்ந்து வந்த நிலையில், வழக்கம்போல் கடந்த வியாழக்கிழமை காலோயில் கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அப்பெண் கிடைக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், நாங்குநேரி அருகே சின்னமூலைக்கரைப்பட்டி காட்டுப் பகுதியில், இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்த போது, கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்று மாயமான அந்த இளம்பெண்ணின் சடலம் தான் அது என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற சுந்தர், அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், பின்னர் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து அவர்கள் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர் என்று கூறப்படுகிறது.