ஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்! சமாதானம் செய்துவைக்கும் கமல்ஹாசன்!!

 

ஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்! சமாதானம் செய்துவைக்கும் கமல்ஹாசன்!!

பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 85 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்னையே கவின் – லாஸ்லியா தான்…. அதையொட்டியே பல எபிசோடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் எந்த போட்டியாளர் வெற்றி பெற்றாரோ அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்.

பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 85 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்னையே கவின் – லாஸ்லியா தான்…. அதையொட்டியே பல எபிசோடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் எந்த போட்டியாளர் வெற்றி பெற்றாரோ அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்.

இந்நிலையில் இந்த டாஸ்கின் ஒரு விளையாட்டின்போது, லாஸ்லியாவை துரத்திக்கொண்டு சென்ற சாண்டி, லாஸ்லியாவை கீழே தள்ளிவிடுகிறார். இதனால் லாஸ்லியாவுக்கு சிறிய காயங்கள் ஏற்படுகின்றன. இதனைப்  பார்த்து பொங்கி எழுந்த கவின், சாண்டியை அனைவரது முன்பும் சரமாரியாக திட்டிவிடுகிறார். இதனால் மனமுடைந்த சாண்டி, லாஸ்லியாவிடமும், கவினிடமும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் கவின் நன்றாக பேசாததால் பிக்பாஸிடம் சொல்லி கண்ணீர் வடித்தார். 

biggboss

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று கமல்ஹாசனின் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு வந்தது. அப்போது சாண்டி, லாஸ்லியாவை தள்ளிவிட்டதற்காக அப்போதே சாரி கேட்டுவிட்டேன். ஆனாலும் கவின் திட்டினான் என குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு கமல், சாண்டி கீழே தள்ளிவிட்டதை லாஸ்லியா கூட பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை , கவின் தான் பெரிது படுத்துகிறார் என கூறினார். மேலும் நீங்கள் இருவரும் நண்பர்கள் தானே, நண்பர்கள் இருவருக்குமிடையில் என்ன பிளவு? என்றும் கேள்வி எழுப்பினார்.  அப்போது சாண்டி நாங்கள் இருவரும் மீண்டும் பேசிவிட்டோம் என தெரிவித்தார். உடனே கமல் என்ன பேசுனீர்கள் என மறுபுறம் கேள்வியெழுப்பினர். இடைமறித்த கவின் நான் பேசலாமா சார் என கமலிடம் கேள்வி கேட்பதோடு இன்றைய மூன்றாவது புரோமோ முடிவடையிறது.