5 சிக்ஸ் அடித்த ராகுல் திவேட்டியாவுக்கு யுவராஜ் சிங் வித்தியாசமான வாழ்த்து

 

5 சிக்ஸ் அடித்த ராகுல் திவேட்டியாவுக்கு யுவராஜ் சிங் வித்தியாசமான வாழ்த்து

நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

முதலில் ஆடிய பஞ்சாப் டீம் 223 ரன்களைக் குவித்தது. அடுத்து இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் டீம் நன்றாக ஆடினாலும் ராகுல் திவேட்டியா இறங்கியதும் ரன் ரேட் படுத்துவிட்டது. ராஜஸ்தானுக்குத் தோல்விதான் என்று முடிவெடுத்தனர் பலரும்.

5 சிக்ஸ் அடித்த ராகுல் திவேட்டியாவுக்கு யுவராஜ் சிங் வித்தியாசமான வாழ்த்து

அப்போதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசினர். இதனால் வெற்றி வாய்ப்பு மீண்டும் ராஜஸ்தான் டீம் பக்கம் வந்தது. அதை விட்டுவிடாமல், ஜாப்ரா ஆர்ச்சரும் இறங்கியதும் 2 சிக்ஸர்கள் அடித்தார். ராகுல் திவேட்டியா 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் திவேட்டியா. இந்த ரன்களே ராஜஸ்தான் டீம் வெற்றி பெற பெரிய உதவி செய்தது. இன்றைக்கு சோஷியல் மீடியாவின் வைரலே ராகுல் திவேட்டியாவின் ஆட்டம் பற்றிதான்.

5 சிக்ஸ் அடித்த ராகுல் திவேட்டியாவுக்கு யுவராஜ் சிங் வித்தியாசமான வாழ்த்து

ஒரு ஓவரில் 5 சிக்ஸர் அடித்தவருக்கு வித்தியாசமான வாழ்த்து சொல்லியிருக்கிறார் யுவராஜ் சிங். ’ஒரு பந்தை சிக்ஸருக்கு அடிக்காமல் விட்டதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார் யுவராஜ். ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஒரு ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பிய பெருமை இதுவரை யுவராஜ் சிங்தான் பெற்றிருக்கிறார். ஒருவேளை ராகுல் திவேட்டியா அப்படி அடித்துவிட்டால் தன் பெயரை ரசிகர்கள் அடுத்த இடத்திற்குச் சென்று விடுமோ என்ற கவலைதான்.