15 கோடி ஆந்திர மக்களின் கனவு.. நாடாளுமன்றத்தில் சிலை வையுங்க… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

 

15 கோடி ஆந்திர மக்களின் கனவு..  நாடாளுமன்றத்தில் சிலை வையுங்க… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

ஆந்திர மாநிலம் பண்டுரங்கி கிராமத்தில் பிறந்தவர் அல்லுரி சீதாராம ராஜூ. அவர் தனது 18 வயதிலேயே துறவு மேற்கொண்டு பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். ஒரு முறை இமயமலைக்கு சென்றபோது, புரட்சி வீரர் பிருத்வி சிங் ஆசாத்தை சந்தித்த போது, ஆங்கில படைக்கு எதிராக செயல்பட்ட வரும் புரட்சி படை பற்றி தெரிந்து கொண்டார். ஆங்கில ஆட்சியில் வதைபடும் மக்களின் துயரம் இவரை கொதிக்க வைத்தது. காடு, மலைகளில் ஒளிந்தவாறே கொரில்லா போர் முறை மூலம் ஆங்கில படைகளை விரட்டி அடித்தார். இறுதியில் 1942ல் ஆங்கிலேய அரசு இவரை சுட்டுக்கொன்றது. ஆந்திர மக்கள் இவரை மலை வீரர் போற்றுகின்றனர்.

15 கோடி ஆந்திர மக்களின் கனவு..  நாடாளுமன்றத்தில் சிலை வையுங்க… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ரகு ராமகிருஷ்ணா ராஜூ கடிதம் எழுதியுள்ளார். ரகு ராமகிருஷ்ணா ராஜூ அந்த கடிதத்தில், சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் உருவ வெண்கல சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள 15 கோடிக்கும் அதிகமான ஆந்திர மக்களின் கனவை (நாடாளுமன்றத்தில் சிலை நிறுவுதல்) பரிசீலனை செய்யுமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். சிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

15 கோடி ஆந்திர மக்களின் கனவு..  நாடாளுமன்றத்தில் சிலை வையுங்க… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

நாடாளுமன்ற மக்களவை சில கமிட்டியின் தரநிலைகள் பரிந்துரைகளுக்கு ஏற்பட மாடல் தயாராக உள்ளது என அதில் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று சுதந்திர போராட்டர வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் 122வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் செலவுகளை குறைக்கும் நோக்கில் புதிய நாடாளுமன்றம வளாகம் கட்டுவதை மத்திய அரசு ஒத்திவைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. சிலை நிறுவ அனுமதி கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.