பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்… வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி!

 

பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்… வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி!

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக் கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் முகேஷ்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம், கபிலன் உள்ளிட்டோருடன் சேர்ந்து தஞ்சை – ஒரத்தநாடு சாலையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றித்திரிந்தனர்.

பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்… வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி!

மேலும், அதனை செல்போனில வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக் கத்தியுடன் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஒரத்தநாடு காவல் நிலைய போலீசார் முகேஷ்குமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.